Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:55:36 PM
வியாழன் | 2 மே 2024 | துல்ஹஜ் 1736, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:10
மறைவு18:27மறைவு13:11
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameSHAMS Kayal
PlaceKayalpattinam
Approved Comments3
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
3
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
சிறப்புக் கட்டுரைகள்:கூடங்குளம் – அணு எதிர்ப்புப் போராட்டம் தொடரக் காரணம் அந்நியச் சதியா? அரசின் மௌனமா? [ஆக்கம் - காயல் மகபூப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கூடங்குளம் – அணு எதிர்ப்...
posted by SHAMS Kayal (Kayalpattinam) [06 March 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 20965

கூடங்குளம் அனல் மின் நிலைய திட்டங்களை ஏன் எதிர்கிறார்கள் (புள்ளி விவரங்கள்).

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான தீர்மானங்கள்: மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கூடன்குளம் அணுஉலை திட்டத்தை கைவிடுவதாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும்.

அச்சத்தை போக்கும் முதல் நடவடிக்கையாக கூடன்குளம் உலை திட்ட வளாகத்தில் பத்திரப்படுத்தப்பட்டுள்ள “யுரேனியத்தை” உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

கூடன்குளம் அணுஉலை திட்டத்தை கைவிட கேட்டு ஜாதி, மத வேறுபாடின்றி நாடு முழுவதும் மக்கள் போராடிவரும் நிலையில் சாதிய, மதவாத குழுக்களை துண்டிவிட்டு மக்களை பிரித்தாள மேற்கொள்ளப்படும் முயற்சிகளை கண்டிக்கிறோம். தமிழ்நாட்டின் மின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக தமிழக முதல்வர் விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்று மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரத்தையும், மாற்று வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களுக்காக முதல்வர் கோரியுள்ள நிதியையும் மத்திய அரசு வழங்க வேண்டும். மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து பொய் பிரசாரம் செய்து வரும் அணுசக்தி துறையை தமிழக, இந்திய அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்

கதிர்வீச்சால் உடல் நலக்குறைவு...!

கதிரியக்கத்தின் பாதிப்பு நம் உடலின் மற்ற பகுதிகளை விட, குழந்தைப் பேறு சார்ந்த உறுப்புகள் மீது தான் அதிகமாக இருக்கும். கதிரியக்கம் விந்து, சினை முட்டைகளை எளிதாகத் தாக்கி அவற்றின் தன்மையை மாற்றிவிடும். அதனால் கருச்சிதைவுகள், குறைமாதப் பிறப்பு, பிறவிக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள் எனப் பல பாதிப்புகள் ஏற்படும். தைராய்டு புற்றுநோய், தோல் புற்று நோய், குருதி சார்ந்த புற்றுநோய் எனப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டோருக்கு மிக அதிகம்.

உலகம் முழுக்கப் பின்பற்றப்பட்டு வரும் கீழ்க்காணும் விதிகள் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தில் முறையாகப் பின்பற்றப்படவில்லை.

அ) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி ஐந்து கி.மீ. சுற்றளவுக்குள் இருபதாயிரம் பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. ஆனால் அணுமின் நிலையத்திலிருந்து பத்து கி.மீ தொலைவிற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் இருபதாயிரம் மக்களும், இடிந்தகரை கிராமத்தில் பன்னிரண்டாயிரம் பேரும் காசா நகரில் நானூற்று ஐம்பது குடும்பங்களும் வசிக்கிறார்கள்.

ஆ) பத்து கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்தப் பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.

இ) முப்பது கி.மீ சுற்றளவுக்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் இரண்டு இலட்சம் பேர் வாழும் நாகர்கோவில் நகரம் இருபத்தெட்டு கி.மீ தொலைவிற்குள் இருக்கிறது.

ஈ) இருபது கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று AERB சொன்னாலும் உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரி பதினைந்து கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.

இப்படிக் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து முப்பது கி.மீ சுற்றளவுக்குள் பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் அம்மக்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, அவர்களுக்குத் தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ நடைமுறையில் சிறிதும் இயலாத காரியமாகும்.

இவை தவிர,

உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களிடம் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை.

உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய இரசிய அறிவியலாளர்களின் வருத்தங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (’Site Evaluation Study’) மக்களுக்குத் தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (’Safety Analysis Report’) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, செய்தியாளர்களுக்கு என யாருக்கும் அளிக்கப்படவில்லை. மக்கள் நடமாட்டம் குறைவான பகுதியில் இல்லை; மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதியில் தான் அணு உலைகள் நிறுவப்பட வேண்டும். இதை நாம் சொல்லவில்லை; தமிழக அரசின் அரசின் அரசாணை எண் 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) சொல்கிறது.

அமெரிக்கா முதலிய பிற நாடுகள் அணு உலைகள் அமைப்பதில் என்ன செய்கின்றன...?

அமெரிக்காவில் 1979ஆம் ஆண்டிலிருந்தே எந்தப் புதிய அணு உலைகளும் கட்டப்படவில்லை.

புகுசிமா அணு உலை நேர்ச்சி நடந்த சப்பானில் மொத்தம் இருந்த 54 அணு உலைகளில் 37 உலைகளை மூடப்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்து புது உலைகளைக் கட்டுவதையும் புதுப்பிப்பதையும் நிறுத்தி வைத்துள்ளது.

இத்தாலியிலும் அணுஉலைகள் மூடப்பட அந்நாட்டின் அரசு முடிவெடுத்துள்ளது.

செர்மனி 17 உலைகளைக் கலைப்பதை ஒத்திவைக்கலாம் என்று நினைத்திருந்தது. இப்போது அம்முடிவை உடனே எடுக்கலாம் என முடிவெடுத்திருக்கிறது.

சீனத்தில் புதிய அணு உலைகளுக்கான ஒப்புதல் நீக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் மக்களுள் அறுபத்திரண்டு விழுக்காட்டுப் பேர் அணு உலைகளை மூட வேண்டும் என்று வாக்களித்திருந்தனர். பதினைந்து விழுக்காட்டு மக்கள் உடனடியாக மூட வேண்டும் என்று தெரிவித்திருத்திருந்தனர்.

மலிவு விலையில் அணு மின்சாரம் என்று அரசு சொல்கிறது அது எப்படி என்ற புள்ளிவிவரம்..! வரும் 20 ஆண்டுகளில் அணு மின்னாற்றலின் அளவை 6 விழுக்காடாகக் கூட்ட வேண்டுமானால் அதற்கு தேவைப்படும் முதலீடு மட்டும் ஐம்பதாயிரம் கோடி ரூபா ஆகும். இப்போது சூரியஆற்றல், காற்றாலை போன்ற முறைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை வெறும் அறுநூறு கோடி ரூபா தான். அதிலேயே அவை ஐந்து விழுக்காட்டு அளவு மின்சாரத்தைத் தந்து விடுகின்றன. இப்போது அணு ஆற்றலுக்கு அரசு ஒதுக்கும் தொகை 3897 கோடி ரூபா. ஆனால் அவை தருவது 2.5 விழுக்காட்டு அளவு மின்சாரம் தான். ஒரு மெகா வாட்(டு) மின்சாரத்தை அணு ஆற்றலின் மூலம் உருவாக்க ஏறத்தாழ இருபத்திரண்டு கோடி ரூபா செலவாகும். ஆனால் சூரிய ஒளி மூலம் அதே அளவு மின்சாரத்தைப் பதினைந்து கோடியில் உருவாக்கிவிடலாம்.

மின்வெட்டை ஒரு நாளும் அணு மின்சாரம் தீர்த்துவிடாது..? மின்வெட்டை ஒரு நாளும் அணு மின்சாரம் தீர்த்துவிடாது. 1962ஆம் ஆண்டே, ‘இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் நாங்கள் 20000 மெ.வா. மின்சாரத்தை அணு உலைகள் வழியாக உற்பத்தி செய்து விடுவோம்’ என்று சொன்னார்கள். ஆனால் 1987ஆம் ஆண்டு ஆயிரம் மெ.வா கூடக் கிடைக்கவில்லை. அதன்பின் இரண்டாயிரமாவது ஆண்டில் நாங்கள் மொத்தத் தேவையில் பத்து விழுக்காட்டு அளவுக்கு மின்சாரம் உருவாக்கி விடுவோம் என்றார்கள். ஆனால் மூன்று விழுக்காட்டைக் கூட எட்டவில்லை. எனவே கூடங்குளம் அணு உலை நமக்கு மின் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் என்பது ஏட்டுச்சுரைக்காய் தான்! அது கறிக்கு உதவாது.

மாற்று திட்டம் என்ன?

தமிழகத்தில் குண்டு விளக்குகளுக்கு(‘பல்பு’) மாற்றாக சி.எப்.எல் (‘’CFL’) விளக்குகளைப் பொருத்தினால் ஒரே நொடியில் 1800 மெ.வா. மின்சாரம் மிச்சமாகும்.

தமிழ்நாட்டில் கயத்தாற்றில் இருந்து கன்னியாகுமரி வரை நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம் நாம் நாள் ஒன்றுக்கு 3200 மெ.வா மின்சாரம் பெறுகிறோம். இந்தியாவில் இது போல் காற்றடிக்கும் கடற்கரை குசராத்து முதல் வடகிழக்கு வரை ஏழாயிரத்து ஐந்நூறு கி.மீ. நீளத்திற்கு உள்ளது. அங்கும் காற்றாலைகள் நிறுவினால் பல்லாயிரக்கணக்கான மெ.வா. மின்சாரம் பெற முடியும்.

இன்றுள்ள காற்றாலைகள் 11-14 கி.மீ வேகத்தில் காற்றடித்தால் சுழல்கின்றன. இவற்றை ஆய்ந்து 4-5 கி.மீ வேகத்தில் காற்றடித்தாலே இயங்கும் வகையில் காற்றாலைகள் அமைக்கலாம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.

ஒரு ச.கி.மீ. பரப்பளவில் சூரியத் தகடுகளைப் பொருத்தினால் நாள் ஒன்றுக்கு 35 மெ.வா. மின்சாரம் பெற முடியும்.

 நம் நாட்டில் உள்ள தார் பாலைவனத்தில் 5000 ச.கி.மீ பரப்பளவில் (5000 * 35 = 175000 மெ.வா.) சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற முடியும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரில் இருந்து எரிவாயு உருவாக்கப்பட்டு மின்சாரம் பெறப்படுகிறது. இருபது இலட்ச உரூபா முதலீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் மாதம் ஓர் இலட்ச உரூபா அளவுக்குப் பணம் மிச்சமாகிறது.

இதே போல் ஒவ்வொரு மாவட்டத் தலைநகர், நகராட்சிகள், பேரூராட்சிகள் என எங்கெல்லாம் கழிவுநீர் அரசால் சேர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் ‘கழிவு நீர் மேலாண்மை’ மூலம் மின்சாரம் பெற முடியும். ஏறத்தாழ ஐந்து மெ.வா. மின்சாரத்தை ஒவ்வொரு நகராட்சியில் இருந்தும் நம்மால் பெற முடியும். இப்படிச் செய்வதன் மூலம் நகர்ப்பகுதிகளில் மின்வெட்டை உடனடியாகக் குறைக்கலாம்.

கூடங்குளம் அணு உலை குறித்து ஆராய (சந்தேக) கமிஷன்..? முன்னாள் சேர்மன் கூடங்குளம் அணு உலை குறித்து ஆராய அணுசக்தி கமிஷனின் முன்னாள் சேர்மன் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் உள்பட நான்குபேரை நிபுணர்குழு உறுப்பினர்களாக அரசு நியமித்துள்ளது.

இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் முக்கிய சிற்பிகளில் ஒருவர்தாம் எம்.ஆ.ஸ்ரீனிவாசன். அணு நிலையத்தை ஸ்தாபிக்க கூடங்குளத்தை தேர்வு செய்ததிலும் ஸ்ரீனிவாசனுக்கு பங்குண்டு. ஸ்ரீனிவாசனின் தலைமையிலான நிபுணர்குழு அணுமின் நிலையத்திற்கு ஆதரவான அறிக்கையை தான் அளிக்கும் என்பதில் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு சந்தேகமில்லை.

மக்களை வாட்டி எடுத்து அவர்களின் கோபத்தை அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது திருப்பும் அரசு...!.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தினமும் 8 மணிநேரம் மின்சார தடை நீடிக்கிறது. பால் விலை, பஸ் கட்டணம் உயர்வு இவற்றால் அவதியுறும் மக்கள் மின்சார தடையினால் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். மாணவர்களுக்கு இரவு நேரங்களில் படிக்க இயலவில்லை. தொழிற்சாலை தொழிலாளர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் மின்சார அலுவலகங்களை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். ஆனால், அரசு மெளனம் சாதித்து வருகிறது. இதற்கு காரணம், தமிழகத்திற்கு உடனடி மின்சார தேவைக்கும், கூடங்குளம் அணு மின் நிலையம்தான் ஒரே தீர்வு என்பதை மக்களுக்கு புரிய வைக்க இவ்வாறு தமிழக அரசு நாடகமாடுவதாக கூறுகிறார்கள்.

வெளிமாநிலத்தில் இருந்து வாங்கும் மின்சாரத்தையும் தமிழக அரசு நிறுத்திவிட்டது. மக்களை வாட்டி எடுத்து அவர்களின் கோபத்தை அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது திருப்பத்தான் தமிழக அரசு திட்டம் ஆகும். தமிழகத்தின் தலை சிறந்த சகுனியாக செயல்படும் பாசிச ‘சோ’ வின் ஆலோசனை தமிழக அரசுக்கு தாராளமாக கிடைப்பதும் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

தொகுப்புக்குத் துணை நின்ற படைப்புகள்:

1அணு உலைகள் குறித்து வெளியான படைப்புகள் அனைத்தும்.

2 ‘கூடங்குளம் பொய்யைப் பிளந்து வாழ்வைக் காக்கும் போர்’, உயிர்மை, 2011 திசம்பர் இதழ்

3. கூடங்குளம்: கலாம் சொல்வதெல்லாம் உண்மை தானா?’, குமுதம் தீராநதி, 2011 திசம்பர் இதழ்

4. மாற்றுவழியில் மின்சாரம்’, நெல்லை கவிநேசன், கோகுலம் கதிர், 2011 திசம்பர் இதழ்

5. http://www.thoothuonline.com/ இணையத்தளத்தின் சில கட்டுரைகள்.

நன்றி.!

Abu SAFWAN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தொடர் மின்வெட்டைக் கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்கக் கோரியும் மார்ச் 06ஆம் தேதி கடையடைப்பு! அனைத்துக் கட்சி, பொதுநல அமைப்புகள் கூட்டத்தில் முடிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:தொடர் மின்வெட்டைக் கண்டித...
posted by SHAMS Kayal PFI (Kayalpattinam) [05 March 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 17481

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தினமும் 8 மணிநேரம் மின்சார தடை நீடிக்கிறது.

பால் விலை, பஸ் கட்டணம் உயர்வு இவற்றால் அவதியுறும் மக்கள் மின்சார தடையினால் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.

மாணவர்களுக்கு இரவு நேரங்களில் படிக்க இயலவில்லை. தொழிற்சாலை தொழிலாளர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் மின்சார அலுவலகங்களை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். ஆனால், அரசு மெளனம் சாதித்து வருகிறது. இதற்கு காரணம், தமிழகத்திற்கு உடனடி மின்சார தேவைக்கும், கூடங்குளம் அணு மின் நிலையம்தான் ஒரே தீர்வு என்பதை மக்களுக்கு புரிய வைக்க இவ்வாறு தமிழக அரசு நாடகமாடுவதாக கூறுகிறார்கள்.

வெளிமாநிலத்தில் இருந்து வாங்கும் மின்சாரத்தையும் தமிழக அரசு நிறுத்திவிட்டது. மக்களை வாட்டி எடுத்து அவர்களின் கோபத்தை அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது திருப்பத்தான் தமிழக அரசு திட்டம் ஆகும்.

கூடங்குளம் அணு மின் நிலையம் திறக்க கூடாது என்பதில் SDPI மற்றும் Popular front of India இன்னும் நிறைய கட்சிகள் இதில் உறுதியாக இருக்கிறது,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் பொறுப்பிற்கு இன்று மட்டும் 42 பேர் வேட்பு மனு தாக்கல்! (வார்டு 01 முதல் 09 வரை) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by அபுதாபி நண்பர்கள் இணையம் (Abu Dhabi - U.A.E) [29 September 2011]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9108

5 -ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு போட்டிடும் சகோதரர் எம்.ஜஹாங்கீர் மிகவும் நேர்மையான சுயநலம் இல்லா பிறர்நலம் பேணுபவர் மற்றும் ஒரு சிறந்த சமூக சேவையாளர். அவர் நமதூர் ஒற்றுமைக்கும் அணைத்து ஜாமாத் குட்டமைப்பின் ஒன்றுபடுதளுக்கும் முழுநேர பணிசெய்தவர். இன்ஷா அல்லாஹ் இதுபோல் நல்ல தலைமைகள் நமதூருக்கு நிச்சயம் வேண்டும்.

அந்த சகோதரருக்கு எங்களது இதயம் நிறைந்த பாராட்டுக்கள் இன்ஷா அல்லா வெற்றி உங்களுக்கே...

Moderator: தயவுசெய்து இவ்வாறான பொதுப்பெயர்களில் கருத்து வெளியிடுவதைத் தவிர்க்கவும். தேவை ஏற்பட்டால் மட்டுமே பொதுப்பெயரை - அதுவும் ஏற்கனவே அறியப்பட்ட பொதுப்பெயரை, அதற்குரியவர்கள் பயன்படுத்தலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
3
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved